
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக
அல்லாஹ்வையும், இறுதி நாளையும்,
வானவர்களையும், வேதங்களையும்,
நபிமார்களையும் நம்புவோரும்
உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும்
தொழுகையை நிலைநாட்டுவோரும்,
ஸகாத்தை வழங்குவோரும்,
வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும்,
வறுமை, நோய், மற்றும்
போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள்.
அவர்களே உண்மை கூறியவர்கள்.
அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
[அல்குர்ஆன் 2:177]